‘இந்திய அரசின் மேலதிக உதவிகளைப் பற்றி ஆலோசிக்க அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்’: பிரதமர்

Date:

இலங்கை ஏற்கனவே இந்திய கடன் வரி மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துள்ள நிலையில், இலங்கைக்கான எதிர்கால உதவிகள் குறித்து மேலும் கலந்துரையாடுவதற்காக இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் ஜூன் 23 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதன்போது, ‘அவர்கள் ஏற்கனவே நிறைய செய்திருப்பதால், அவர்களுக்கென்று வரம்புகள் இருப்பதால், இந்தியாவிடம் கூடுதல் உதவியை நாங்கள் கோர முடியாது.

அவற்றை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது என்பதில் நாம் இப்போது கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்க்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நம்பியிருப்பதுதான் இப்போது முன்னோக்கி செல்லும் ஒரே வழி,’ என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்காவின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...

இஸ்ரேல் வேலைவாய்ப்பு மோசடி: 7 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்குள் (SLBFE) இடம்பெற்று வந்த போலி இஸ்ரேல்...

இலங்கை – ஓமான் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த உயர்மட்டப் பேச்சுவார்த்தை!

ஓமான் சுல்தானகத்தின் வர்த்தக அமைச்சின் வெளிநாட்டு வர்த்தக மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு...