இன்று இரவு முதல் அரிசி கட்டுப்பாட்டு விலைக்கே விற்க வேண்டும்: டட்லி சிறிசேன

Date:

அனைத்து அரிசி வகைகளும் அரச அங்கீகாரம் பெற்ற கட்டுப்பாட்டு விலைக்கு இன்று இரவு முதல் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, அனைத்து அரிசி ஆலைகளும் தங்களது இருப்புகளை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதேநேரம் அரிசி சில்லறை விற்பனையாளர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலைக்குக் குறைவான கையிருப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இன்று முதல் அரிசியின் சந்தை விலையை பேணுவதற்கு மக்களே முழுப்பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்படுத்தப்பட்ட விலையின் கீழ் அரிசியைக் கோருவதற்கு மக்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும், அவ்வாறு வழங்கப்படாவிடின் கிராமசேவக அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 2, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை பின்வருமாறு விதித்துள்ளது.

வெள்ளை/ மற்றும் சிவப்பு நாடு – வேகவைத்த, உள்ளூர் அரிசி ரூ. ஒரு கிலோ 220. வெள்ளை/ சிவப்பு சம்பா – வேகவைத்த – உள்ளூர் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ. 230. (கீரி சம்பாவைத் தவிர)

கீரி சம்பா (உள்ளூர்) ஒரு கிலோ ரூ.  260 ஆகும்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...