இன்று முதல் மதிய உணவுப் பொதிகளின் விலை 10 வீதமாக அதிகரிப்பு!

Date:

காய்கறி அரிசி பொதிகள் உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் தற்போதைய விலையில் இருந்து 10 வீதம் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், மரக்கறி, மீன் மற்றும் கோழிக்கறி அரிசிப் பொதிகள் மற்றும் பொரித்த அரிசி மற்றும் கொட்டு ஆகியவற்றின் விலைகள் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன.

எவ்வாறாயினும், பிளேன் டீ, பால் தேநீர் விலை உயர்வு அமுலுக்கு வராது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...