இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் முதலாவது போட்டி இன்று (23) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 3-வது ஓவரில் 17 ஓட்டங்களில் முதல் விக்கெட்டை பறிக்கொடுத்தது.
6 பந்துகளை சந்தித்த மந்தனா 1 ஒட்டம் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த மேகனா வந்த முதல் பந்திலேயே ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த நெருக்கடியான நிலையில் சவாலி வர்மாவுடன் கேப்டன் கவூர் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். 31 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த சவாலி வர்மா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலேயே கவூர் வெளியேறினார். இதனால் இந்திய அணி 10.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி 36 ஓட்டங்களும், தீப்தி வர்மா 8 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ஓட்டங்கள் எடுத்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 139 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கும்