உணவின்றி, பிள்ளைகள் பட்டினியில் வாடுவதைக் கண்டு தாய் தற்கொலைக்கு முயற்சி!

Date:

உணவு வழங்க வழியில்லாமல் தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதைக் கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன், தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக் கொள்ள முடியாத தாய், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாகவும் அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

(தகவல்- -எம்.செல்வராஜா)

 

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...