உணவின்றி, பிள்ளைகள் பட்டினியில் வாடுவதைக் கண்டு தாய் தற்கொலைக்கு முயற்சி!

Date:

உணவு வழங்க வழியில்லாமல் தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதைக் கண்டு, சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து, அதனை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த அந்த தாய், தற்போது பதுளை வைத்தியசாலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

4, 8 மற்றும் 9 வயதுகளில் இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளதுடன், தந்தைக்கும் நிரந்தர தொழில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுமார் 3 நாட்களாக நீரை மட்டுமே அருந்தி இவர்கள் உயிர்வாழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிள்ளைகள் பட்டினியில் தவிப்பதை, தாங்கிக் கொள்ள முடியாத தாய், தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளதாகவும் அவரை காப்பாற்றுவதற்காக வைத்தியர்கள் தற்போது போராடிக்கொண்டிருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.

(தகவல்- -எம்.செல்வராஜா)

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...