நாடு எதிர் நோக்கியுள்ள உணவுப் தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யும் நோக்கில் பல்வேறு செயற்திட்டங்களை இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை ஆரம்பித்துள்ளது.
அதன் முதற்கட்டமாக 5000 அடி மரவள்ளிக் கிழங்குத் தடிகள் மற்றும் சுமார் 10,000 (1000 பக்கற்றுகள்) மிளகாய், கத்தரிக் கன்றுகள் இலவசமாக வழங்கும் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாவனல்லை பிரதேச செயலக செயலாளர் வி.ஓ.எல்.எஸ். ரத்னசேகர கலந்து கொண்டார்.
மேலும் கிராம உத்தியோகத்தர், கமநல உத்தியோத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தவர்கள் மற்றும் மாவனல்லைப் பொலிஸ் சமூக பிரிவு பொறுப்பதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்கு உதவி செய்த மற்றும் ஆர்வத்துடன் பங்குபற்றிய அனைவருக்கும் இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லைக் கிளை நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
இதேவேளை, இந்நிகழ்வில் 30 பலா மரக்கன்றுகளும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.