‘உரம் வழங்குவதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது’

Date:

எதிர்வரும் நெல் விதைப்பதற்கான பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹன புஸ்பகுமார  நம்பிக்கை தெரிவித்தார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோதே இவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முழு நெற்பயிர்க்கும் உரம் வழங்குவதற்கு 220 மில்லியன் டொலர்கள் செலவாகும் என அமைச்சின் செயலாளர்  தெரிவித்தார்.

ஏற்கனவே 110 மில்லியன் ரூபா பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயக பருவத்திற்கான முழுமையான உரத்தை வழங்க முடியும் என செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் மகா பருவத்தில் 800,000 ஹெக்டேயர் நெற்செய்கையை மேற்கொள்ள முடிந்தால் நாட்டின் 09 மாத நெல் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்ட தலைப்புகளில் ஒன்று இயற்கை விவசாயம்.

இவ்வாறான செயற்பாடு பாரியளவில் மேற்கொள்ளப்படும் போது ஏற்படும் நிலைமைகள் குறித்து விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, உரம் இல்லாத போதிலும், பருவத்தில் நெற்செய்கை தொடர்கிறது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தரவுகளின்படி 75 வீதமான நெற்பயிர்கள் உழவு செய்யப்பட்டுள்ளன.

65 சதவீத விதைப்பு நிறைவடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், அவர்களுக்கு உரம் எப்போது கிடைக்கும் என்பது குறித்து இன்னும் உறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...