எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் சேவைகள் பாதிப்பு: எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

Date:

ஆம்புலன்ஸ், மருந்துகளை ஏற்றிச்செல்லும் வாகனம், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருளை பல மருத்துவமனைகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸுகளுக்கு எரிபொருள் நிரப்பாவிட்டால், ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வசதிகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டில் மருந்துகள் அல்லது மருத்துவமனைகள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், 15 நோயாளர் காவு வண்டிகளில் போதியளவு எரிபொருள்  இல்லை என தெரிவித்தார்.

இரண்டு மருந்து ஏற்றுச்செல்லும் லொறிகள், நான்கு கெப் வண்டிகள் மற்றும் ஒரு வேன் எரிபொருளின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை காரணமாக தனியார் அம்புலன்ஸ் சேவைகளும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...