எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் சேவைகள் பாதிப்பு: எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

Date:

ஆம்புலன்ஸ், மருந்துகளை ஏற்றிச்செல்லும் வாகனம், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருளை பல மருத்துவமனைகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸுகளுக்கு எரிபொருள் நிரப்பாவிட்டால், ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வசதிகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டில் மருந்துகள் அல்லது மருத்துவமனைகள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், 15 நோயாளர் காவு வண்டிகளில் போதியளவு எரிபொருள்  இல்லை என தெரிவித்தார்.

இரண்டு மருந்து ஏற்றுச்செல்லும் லொறிகள், நான்கு கெப் வண்டிகள் மற்றும் ஒரு வேன் எரிபொருளின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை காரணமாக தனியார் அம்புலன்ஸ் சேவைகளும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...