‘எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’: எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு நாட்டில் இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட முன்னுரிமையின் கீழ் வெளியிட  எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...