‘எரிபொருள் விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’: எரிசக்தி அமைச்சர்

Date:

எதிர்வரும் 06 மாதங்களுக்குள் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு போதிய வெளிநாட்டு கையிருப்பு நாட்டில் இல்லாத காரணத்தினால், குறிப்பிட்ட முன்னுரிமையின் கீழ் வெளியிட  எரிபொருளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படவுள்ளதுடன், அரச பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை போக்குவரத்து வாகனங்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படும்.

மேலும், மீனவர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் உள்ள 22 மீன்பிடி துறைமுகங்கள் மூலம் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விடுவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நாட்டில் 160 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...