ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வு ஆரம்பமாகிறது!

Date:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று (13) தொடக்கம் ஜூலை 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 50வது அமர்வில் இலங்கை நேரப்படி மாலை 4.20 மணியளவில் அவர் உரையாற்ற உள்ளார்.

மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கு அமைவாக அமைச்சர் பீரிஸின் உரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சின்ஜியாங், சீனா, உக்ரைன் மற்றும் பிற நாடுகளில் விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இதேவேளை மனித உரிமைகளுக்கான ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் வருடாந்த அறிக்கையுடன் அமர்வு ஆரம்பமாகும்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...