குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது: வைத்தியர் தீபால் பெரேரா!

Date:

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையின்போது குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் போதாமை கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த வைத்தியர் ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விட பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களும் தங்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...