குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடு காணப்படுகிறது: வைத்தியர் தீபால் பெரேரா!

Date:

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 20% மான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமையே இதற்கு முக்கியக் காரணம் என வைத்தியசாலையின் குழந்தைகள் நல சிறப்பு வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பரிசோதனையின்போது குழந்தைகளுக்குத் தேவையான கார்போஹைட்ரேட், புரதம் உள்ளிட்ட மிக முக்கிய ஊட்டச்சத்துக்கள் போதாமை கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்ந்து கருத்துத்தெரிவித்த வைத்தியர் ச்சீஸ், பட்டர் போன்றவற்றை விட பால், முட்டை, சோறு மற்றும் பச்சை கீரைகளை உணவில் சேர்க்குமாறும், மஞ்சள் காய்கறிகளை பெற்றுக் கொடுக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கர்ப்பிணித் தாய்மார்களும் தங்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...