கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழா இன்று!

Date:

கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 188ஆவது வருடாந்தத் திருவிழா இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இன்று அதிகாலை 4 மணிமுதல் மும்மொழிகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு, இன்று மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சுரூப பவனியுடன் இன்றைய தினம் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும் நேரம் தொடர்பான விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அதிகாலை 4.00 மணிக்கு தமிழ் மொழி, 5.00 மணிக்கு சிங்கள மொழி, 6.00 மணிக்கு தமிழ் மொழி, 7.00 மணிக்கு சிங்கள மொழி, 8.00 மணிக்கு தமிழ் மொழி, 10.00 மணிக்கு சிங்கள மொழி, நண்பகல் 12.00 மணிக்கு ஆங்கில மொழி இடம்பெறும்.

மேலும், மாலை 5.00 மணிக்கு புனிதரின் திருச்சுரூப பவனி இடம்பெற்று இரவு 8.00 மணியளவில் புனித அந்தோனியாரின் திருச்சுரூப ஆசீர்வாதம் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...