‘கோட்டா வெளியேறும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா?’: துஷார இந்துனில் கேள்வி

Date:

ஜனாதிபதி கோட்டா செல்லும் வரை பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாதா என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (8) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதன்போது, போராடும் குழுக்கள் வளர்க்கப்படுவதால் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படாது என்ற வதந்தி சமூகத்தில் நிலவுகிறது.

ஒரு நேர்காணலின் போது, இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கும் வரை போகமாட்டேன் என ஜனாதிபதி கூறுகின்றாரே, அதற்கேற்ப இரண்டரை வருடங்கள் பல்கலைக்கழகங்களை திறக்காமல் இருக்க நினைக்கின்றார் எனவும் துஷார இந்துனில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஏற்கனவே பல்கலைக்கழகம் திறக்கப்பட்டு விரிவுரைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி செல்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு தன்னால் பதிலளிக்க முடியாது எனவும், அந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டியது ஜனாதிபதியே எனவும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...