‘சில எம்.பி.க்கள் மற்றவர்களின் உடைகளை அணிந்து தான் சபைக்கு வருகிறார்கள்’ : பிரசன்ன

Date:

தரித்திரம் பிடித்தவர்கள், கஞ்சா அடிப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததனால் மற்றவர்களின் உடைகளை அணிந்து கொண்டுதான் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வருகைத் தருகின்றார்கள் என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வாய்மொழிப் பதிலை எதிர்பார்த்து எழுப்பிய கேள்விக்கே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

இந்த சம்பவங்களை தூண்டிய அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் இன்றும் இங்கு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இரண்டு அரச நிறுவனங்களுடன் சேர்ந்து தனது வீட்டிற்கு தீ வைத்தவர்கள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தமது கட்சிக்குள் வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

1977ஆம் ஆண்டு தனது வீடு தீக்கிரையாக்கப்பட்டதாகவும், அப்போது முழு குடும்பமும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஒரே அறையில் வாழ்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடுகளை வழங்குவது இன்று நேற்றைய தினம் எடுக்கப்பட்டதல்ல எனவும், மதிவெல வீட்டுத்திட்டத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த வீடுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இந்த விடயத்தை எவரும் உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும் எனவும் சிலர் இங்கு புனிதர்களாக பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வீடற்ற அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளை ஆராய்வது தனது கடமை என அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...