ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நெருக்கடி நிலை: மைத்திரி

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி – பிரதமர் இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வரவழைக்கும் போது பிரதமரும் அவ்வாறே செய்வார் எனவும் சிறிசேன தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் உலகமே நம்பும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...