ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நெருக்கடி நிலை: மைத்திரி

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி – பிரதமர் இருவருக்கும் இடையே சரியான உறவு இல்லை என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இதேபோன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வரவழைக்கும் போது பிரதமரும் அவ்வாறே செய்வார் எனவும் சிறிசேன தெரிவித்தார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவதாகவும் உலகமே நம்பும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதன் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...

உலக மனிதநேய தினம்: மனிதாபிமானத்தை முதன்மையாகக் கருதும் சவூதி அரேபியா – இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

எழுத்து: கெளரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆகஸ்ட்...

சமூக சேவை அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டங்களுக்காக 2026 வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம்

2025 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில்...

நாட்டின் சில பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...