தமது வீடுகளுக்கு அருகிலுள்ள பாடசாலைகளுக்கு, ஆசிரியர்களை கடமைக்கு அமர்த்த தீர்மானம்: கல்வி அமைச்சு

Date:

ஆசிரியர்கள் தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளில் சேவைகளில் ஈடுபட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை மாத்திரமே செலுப்படியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு அதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவை அமர்த்தும் போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறு கல்வி அமைச்சு, தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவையில் அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலையொன்றில் மேலதிக ஆசிரியர்கள் இருப்பார்களாயின், மேலதிகமாக உள்ள ஆசிரியருக்கு மற்றுமொரு ஆசிரியரை ஈடுபடுத்த முடியாது, அவரை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள பாடசாலையில் கடமை அமர்த்த முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...