‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’: வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது!

Date:

வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது சூதாட்ட வணிகங்கள் குறித்து பொறுப்புக் கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வெளியில் வருமாறும் அவரை அழைத்தனர்.

இதேவேளை போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு வெளியே கலகத் தடுப்புப் பொலிஸாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...