‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’: வீட்டிற்கு வெளியே போராட்டம் வெடித்தது!

Date:

வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது சூதாட்ட வணிகங்கள் குறித்து பொறுப்புக் கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வெளியில் வருமாறும் அவரை அழைத்தனர்.

இதேவேளை போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு வெளியே கலகத் தடுப்புப் பொலிஸாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...