தென் கொரியாவில் 06 மாதங்களில் 5800 பேருக்கு வேலைவாய்ப்பு!

Date:

சுமார் 5,800 பேர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தென் கொரியாவுக்கு வேலைக்காக அனுப்பப்படுவார்கள் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

119 பேர் கொண்ட முதல் குழு நேற்றிரவு தென் கொரியாவுக்கு புறப்பட்டுச் சென்றதாக பணியகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிக அங்கீகாரம் வழங்கும் முறைமை எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...