நபிகள் நாயகம் விவகாரம்: போராட்டம் நடத்தும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினரை நாடு கடத்தும் குவைத் அரசு!

Date:

நபிகள் நாயகம் சர்ச்சை கருத்துக்கு எதிராக குவைத் நாட்டில் போராட்டம் நடத்தியோரை அந்நாட்டு அரசு சொந்தநாட்டுக்கு அனுப்பி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நூபர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ஈரான், கத்தார், குவைத், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் இந்திய தூதரகத்திற்கு விளக்கம் கேட்டு மனு அனுப்பின. இந்த மனுக்கு இந்திய தூதரகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது.

இருப்பினும் நூபர் சர்மாவை கைது செய்யக்கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அத்துடன் வளைகுடா நாடுகளில் சில இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதனிடையே குவைத் அரசு, நபிகள் நாயகம் விவகாரம் தொடர்பாக குவைத் நாட்டில் போராட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ நடத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது.

ஆனால், ஃபஹாஹீல் பகுதியில்  போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் குவைத் அரசு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாவை ரத்து செய்து, அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்ப உத்தரவிட்டது.

அந்த வகையில் 20-க்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் குவைத் விதிகளின்படி தொழில், படிப்பு, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக அந்நாட்டுக்கு வருவோர் போராட்டம் நடத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...