நாட்டின் சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது:மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் முறையான அமைப்பு இந்த வாரத்தில் கூட ஏற்படுத்தப்படாவிட்டால் சுகாதாரம் மேசமாகும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊழியர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் சத்திரசிகிச்சை மற்றும் வைத்தியசாலை கிளினிக்குகளை நடத்த முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அப்படியானால் மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் செய்யும் சூழல் ஏற்படும் என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ சங்கத்தின் 31 கிளைகளின் பிரதிநிதிகள் நேற்று (26) பிரச்சினைக்குரிய நிலைமை தொடர்பில் சந்தித்துள்ளனர்.

சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில் நாளை (28) சுகாதார அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...