தற்போது நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய வேலைத்திட்டங்களை புத்தளம் நகரசபை, பெரிய பள்ளி, ஜம்இய்யதுல் உலமா, பாதுகாப்பு தரப்புக்கள், சமூக அமைப்புக்கள் ஆகியன ஒன்றிணைந்து மக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ் ஏற்பாட்டிற்கு அமைவாக புத்தளம் நகரில் அமைந்துள்ள கே.ஏ.பாயிஸ் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி முதல் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எமது நியூஸ் நவ் பேஸ்புக் (Facebook) ஊடாக நேரடியாக அஞ்சல் செய்யப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/tamil.newsnow.lk