நிமல் மற்றும் அமரவீரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: சுதந்திரக் கட்சி

Date:

தற்போதைய அரசாங்கத்தில் கட்சிக்கு அறிவிக்காமல் அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சிக்கு தெரிவிக்காமல் பதவியேற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோருக்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதேபோல் இவர்களுக்கும் கட்சிக்கு அறிவிக்காமல் பதவியேற்றதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பிரிவினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு பிரிவினருக்கு வேறொருசட்டமும் இருக்க முடியாது கட்சியில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...