பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் திருகோணமலையில் பூப்பந்து போட்டி!

Date:

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து 2022 ஜூன் 18 முதல் 19 வரை பூப்பந்து போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப்போட்டிகள் திருகோணமலை ‘மெக் ஹெய்சர்’ (Mc Heyzer) ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு வயதுடைய மாணவர்கள் தங்களுடைய தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

மேலும் இந்த பரிசளிப்பு விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தார்.

அத்தோடு பாகிஸ்தான் துணை உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமட் உரையாற்றினார்.

இதன்போது, போட்டியை ஏற்பாடு செய்த மாண்புமிகு ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.

பாகிஸ்தானும் இலங்கையும் வலுவான நட்புறவைப் பகிர்ந்துகொள்வதுடன் விளையாட்டு மீதான அன்பையும் இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் இதயங்களில் இணைத்துக்கொள்வதாக அவர் கூறினார்.

மேலும் பாகிஸ்தானைப் போலவே இலங்கையும் விளையாட்டை விரும்பும் நாடு என்றும்,  இளைஞர்களின் விளையாட்டு மீதான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் இலங்கை பாடசாலை முறைமை மிகவும் தீவிரமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த போட்டியானது ஏற்கனவே இருக்கும் நமது மக்களுடன் சிறந்த உறவை மேலும் மேம்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...