பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

Date:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வமாக பயன்படுத்துவதற்காக 101 புதிய வீடுகளை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவைப் பத்திரத்தின்படி, பன்னிபிட்டியவிலுள்ள ‘வியத்புர’ வீடமைப்புத் திட்டத்தில் இருந்து வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து 101 அலகுகளும் தோராயமாக ரூ. 1795 மில்லியன்களாகும்.

மேலும், மதிவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதி பாழடைந்து வரும் நிலையில், அந்த வீடுகளுக்கு போதிய இடவசதி இல்லையெனவும் அதற்கு மாற்றாக இந்த வீட்டுத் தொகுதிகளை வழங்க அமைச்சரவைப் பத்திரம் பரிந்துரைக்கிறது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை வழங்கி தற்காலிக அடிப்படையில் வீடுகளை ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...