மகிந்த மருத்துவமனையில் அனுமதி? : ‘சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை’

Date:

இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவரது அலுவலகம் மறுத்துள்ளது.

முன்னாள் பிரதமரின் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியான செய்திகளை நிராகரித்து, முன்னாள் பிரதமரின் செயலாளர் கீத் காசிலிங்கம் தனது டுவிட்டர் பதிவில்  வெளியிட்டுள்ளார்.

அதில் ராஜபக்க்ஷ மருத்துவமனையில் இல்லை என்றும், அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்க்ஷ  கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று சமூக ஊடகங்களில் காலை செய்திகள் வெளியாகின.

Popular

More like this
Related

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...