மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.

அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அனுதாப பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதன்படி அவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தக்காலத்தில் 30 வருடங்களாக மக்கள் மரண பயத்துடனேயே வீதிகளில் சென்றனர்.

2019 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் அந்த அச்சம் இல்லாது செய்யப்பட்ட போதும், தற்போது எம்.பிக்கள் மரண அச்சத்துடன் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னால் திட்டமிட்டு செயற்படும் சிலர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...