மகிந்த ராஜபக்ஷ கறுப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றம் வந்தார்!

Date:

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவும் தனது கையில் கறுப்புப் பட்டியை அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.

அதேநேரம், ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்புப் பட்டியை அணிந்தவாரே இன்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அனுதாப பிரேரணை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.

இதன்படி அவர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் கறுப்புப் பட்டியை அணிந்திருந்தனர்.

இதன்போது உரையாற்றிய மகிந்த ராஜபக்ஷ, யுத்தக்காலத்தில் 30 வருடங்களாக மக்கள் மரண பயத்துடனேயே வீதிகளில் சென்றனர்.

2019 மே 19 ஆம் திகதிக்கு பின்னர் அந்த அச்சம் இல்லாது செய்யப்பட்ட போதும், தற்போது எம்.பிக்கள் மரண அச்சத்துடன் செல்லும் நிலைமை உருவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

இவ்வாறான சம்பவங்களின் பின்னால் திட்டமிட்டு செயற்படும் சிலர் இருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...