அக்கரைப்பற்று – பள்ளக்காட்டு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 4 மாத ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை குறித்த பகுதியில் உள்ள மரம் ஒன்றின் கீழ், குழந்தையை உறங்க வைத்து விட்டு பெற்றோர் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு வந்த காட்டுயானை குழந்தையை தாக்கியதில் குழந்தை உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.