ரயில் கட்டணத்தை பேருந்து கட்டணத்தில் பாதியாக உயர்த்துவதற்கான பொதுவான கொள்கை வகுக்க வேண்டுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (8) பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, அவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி யாழ்ப்பாணத்திற்கான ஒரு புகையிரத பயணத்தினால் 300,000 ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணமும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.