‘யாழ்ப்பாணத்திற்கான ஒரு புகையிரத பயண செலவு ரூ.300,000’:ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு குறித்து பந்துல விளக்கம்!

Date:

ரயில் கட்டணத்தை பேருந்து கட்டணத்தில் பாதியாக உயர்த்துவதற்கான பொதுவான கொள்கை வகுக்க வேண்டுமென போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (8) பாராளுமன்றத்தில் கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, அவ்வாறான பொதுவான கொள்கை வகுக்கப்படாவிட்டால், ஓடும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை இரவு நேரத்தில் அதிவேக ரயிலை இயக்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிபொருளுக்காக மட்டும் 1.3 மில்லியன் ரூபாய் செலவாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி யாழ்ப்பாணத்திற்கான ஒரு புகையிரத பயணத்தினால் 300,000 ரூபா நட்டம் ஏற்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணமும் உயர்ந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...