‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’: பிரதமர் இல்லத்து அருகில் ஹிருணிகா தலைமையில் பெண்கள் போரராட்டம்

Date:

கொழும்பில் ரணிலின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டம் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

‘ராஜபக்சக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளை அவர்களால் தீர்க்க முடியாது’ எனவும் தெரிவித்து குறித்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்திற்குச் சென்றதால் தர்ஸ்டன் கல்லூரி வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களும் ஹிருணிகாவும், ‘ரணில் தம்மைச் சந்திக்க வேண்டும்’ என்று கோரி தரையில் அமர்ந்து கொண்டதாகவும் அதுவரை அசையப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூடுதல் பாதுகாப்புடன் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் தற்போது தடுப்புகளை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Popular

More like this
Related

இஸ்ரேலின் தொடர் குண்டுவீச்சு: காசாவில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் நரம்பு மண்டலத்திற்குப் பெரும் அச்சுறுத்தல்!

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும்...

22 ஆவது திருத்தம் மீதான எதிர்ப்பு: ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் கடிதம்.

உயர்நீதிமன்ற மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நோக்கில்...

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளரான சுகீஸ்வர பண்டாரவை...

விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு!

பொரலஸ்கமுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெல்லன்வில ராஜமஹா விகாரையில் நடைபெறும் எசல மகா...