ரூ. 9 இலட்சம் பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர், விசேட அதிரடிப்படையினரால் கைது !

Date:

கிரந்துருகோட்டே வீடொன்றில் சுமார் 900,000 ரூபா பெறுமதியான எரிபொருளை மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் 1,900 லீட்டர் டீசல் மற்றும் 19 லீட்டர் பெட்ரோலை பதுக்கி வைத்துள்ளார்.
குறித்த சந்தேக நபர் 42 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கிரந்துருகோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அறந்தலாவ விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அறந்தலாவ முகாமின் கட்டளை அதிகாரி இன்ஸ்பெக்டர் எம்.எம்.கே. பீரிஸ் உள்ளிட்டோர் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...