வடக்கு- கிழக்கில் உள்ள வன நிலங்கள் பயிர்ச்செய்கைக்காக கொடுக்கப்பட்டுள்ளன!

Date:

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வன திணைக்களத்தின் கீழ் உள்ள வயல் நிலங்களை மீண்டும் விவசாய மக்களுக்கு வழங்க விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதி, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது வன திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வயல் நிலங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் கமநல ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

வனப்பாதுகாப்பிற்காக கையகப்படுத்தப்பட்ட காணிகளை இம்முறை மற்றும் எதிர்வரும் பருவ காலத்தில் விவசாயம் செய்யக்கூடிய வகையில் விவசாயிகளுக்கு வழங்குவதை துரிதப்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...