வீட்டுத்தோட்டம் அமைப்பதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை!

Date:

அடுத்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் அரச உத்தியோகத்தர்கள் வீட்டில் இருந்தே தமது கடமைகளை மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாளை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கான காரணங்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கருத்து வெளியிட்டார்.

அடுத்த வாரத்தில் இந்து இதனை நடைமுறைப்படுத்த கலந்துரையாடல்கள் நட்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வீடுகளில் அவர்கள் உபயோகமுள்ள முறையில் பயிர்செய்கையை மேற்கொள்ளும் வகையிலேயே இந்த விடுமுறையை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் நாளை திங்கட்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் எதிர்நோக்கும் உரப் பிரச்சினை தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், உரப்பிரச்சினை இன்று நாட்டில் நிலவுகின்றது.

எனினும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...