‘ஹஜ் யாத்திரை தொடர்பாக முடிவெடுக்கும் முன் மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்’: ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர்

Date:

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை என்ற தீர்மானம் நல்லதொரு முடிவாக இருந்தாலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமய அறிஞர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர் அஷ் ஷேக் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அகில இலங்கை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பேரவையின் நிர்வாகக் குழு மற்றும் ஆலோசனை (பத்வா) குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்ததன் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் மார்க்க அறிஞர்களைக் கலந்தாலோசிக்காமல் மார்க்கம் தொடர்பான விடயங்களில் உலமாக்களுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக அமையாது என்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...