‘ஹஜ் யாத்திரை தொடர்பாக முடிவெடுக்கும் முன் மார்க்க அறிஞர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்’: ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர்

Date:

நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை என்ற தீர்மானம் நல்லதொரு முடிவாக இருந்தாலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சமய அறிஞர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும் என ஐம்இய்யதுல் உலமா பொதுச்செயலாளர் அஷ் ஷேக் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அகில இலங்கை இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பேரவையின் நிர்வாகக் குழு மற்றும் ஆலோசனை (பத்வா) குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்ததன் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

‘நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் மார்க்க அறிஞர்களைக் கலந்தாலோசிக்காமல் மார்க்கம் தொடர்பான விடயங்களில் உலமாக்களுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக அமையாது என்றார்.

Popular

More like this
Related

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பரிதாப பலி !

கரூரில் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மயக்கமடைந்து பலியானவர்களின்...

இலங்கையில் LGBTIQ+ சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல்!

இலங்கையில்  (LGBTIQ+) சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் திட்டத்திற்கு இலங்கை...

கொலம்பியா ஜனாதிபதியின் விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா!

அமெரிக்காவில் வன்முறையைத் தூண்டியதற்காக, கொலம்பிய ஜனாதிபதி குஸ்தாவோ பெட்ரோவின் விசாவை ரத்து...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அறிவித்தல்!

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025...