100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Date:

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எரிவாயுவின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளதுடன்.

மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இந்த கையிருப்பு நான்கு மாதங்களுக்கு நாட்டுக்கு எரிவாயு வழங்க போதுமானதாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயுவில் 70வீத உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 5 மில்லியன் 12.5 சிலிண்டர் சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 சிலிண்டர் சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 சிலிண்டர்கள், மீதமுள்ள 30 வீத வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 தொன் எல்.பி.ஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கை வந்தடையும் எனவும் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...