100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Date:

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எரிவாயுவின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளதுடன்.

மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இந்த கையிருப்பு நான்கு மாதங்களுக்கு நாட்டுக்கு எரிவாயு வழங்க போதுமானதாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயுவில் 70வீத உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 5 மில்லியன் 12.5 சிலிண்டர் சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 சிலிண்டர் சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 சிலிண்டர்கள், மீதமுள்ள 30 வீத வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 தொன் எல்.பி.ஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கை வந்தடையும் எனவும் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...