100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து!

Date:

நிதி அமைச்சின் கீழ் இயங்கும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெற்றிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று (30) கைச்சாத்திட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எரிவாயுவின் மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். உலக வங்கி 70 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளதுடன்.

மீதமுள்ள 20 மில்லியன் டொலர்களை லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளதாகவும், இந்த கையிருப்பு நான்கு மாதங்களுக்கு நாட்டுக்கு எரிவாயு வழங்க போதுமானதாக இருக்கும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த எரிவாயுவில் 70வீத உள்நாட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 5 மில்லியன் 12.5 சிலிண்டர் சிலிண்டர்கள், 1 மில்லியன் 5 சிலிண்டர் சிலிண்டர்கள் மற்றும் 1 மில்லியன் 2.5 சிலிண்டர்கள், மீதமுள்ள 30 வீத வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை இந்த ஒப்பந்தத்தின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 தொன் எல்.பி.ஜி எரிவாயு ஜூலை முதல் வாரத்தில் இலங்கை வந்தடையும் எனவும் விநியோகம் உடனடியாக ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...