2021 க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை முடிவுகள் தொடர்பான அறிவிப்பு!

Date:

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி முதல் சுற்று ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 26 ஆம் திகதி முடிவடையும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம். டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டம் ஜூன் 30 ஆம் திகதி தொடங்கி ஜூலை 9 ஆம் திகதி முடிவடையும். 106 பரீட்சை நிலையங்களில், 32,368 ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் கடமைகளில் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் டிசம்பரில் பரீட்சை நடத்தப்படும் போது, புத்தாண்டுக்கு முன்னதாக பெறுபேறுகள் வெளியிடப்படும் எனவும், ஆனால் தற்போது நடைபெறும் பரீட்சைகளுக்கான திகதியை வழங்க முடியாது எனவும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களம் பல செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், உயர்தரப் பரீட்சை இன்னும் நிறைவடையவில்லை எனவும் தெரிவித்தார்.

உயர்தரப் பெறுபேறுகள் கணனிப் பிரிவிலுள்ள மதிப்பீட்டுக் கிளைகளினால் மாற்றப்பட்டுள்ளதாகவும், விரைவில் பெறுபேறுகள் வழங்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...