40,000 மெட்ரிக் டன் பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்!

Date:

40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று நாட்டை வந்தடையவிருந்த கப்பல், மேலும் தாமதமடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விநியோக நிறுவனம் இது தொடர்பில் பெற்றோலிற கூட்டுதாபனத்திற்கு அறிவித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை தெரிவித்திருந்தார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் தாங்கிய குறித்த கப்பல், நேற்று முன்தினம் நாட்டை வந்தடைய இருந்தது.

எனினும், அந்தக் கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடையும் என பின்னர் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குறித்த கப்பல் இலங்கையை வந்தடையும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி வெள்ளிக்கிழமைகளில், சுகாதார சேவை பணிக்குழாமினருக்காக தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், வைத்தியர், தாதியர், ஒளடதவியலாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணிக்குழாமினர், நேற்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகளில் காத்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

வைத்தியர்களுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொடுக்க வினைத்திறனான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் நேற்று வலியுறுத்தி இருந்தார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...