பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் என இடைக்கால மருத்துவ சேவைகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல மருத்துவமனைகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களையும் வாரத்தில் 03 நாட்கள் மாத்திரம் இயக்கும் தீர்மானத்திற்கு எதிராக தபால் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களையும் தொழில் நடவடிக்கையை இடைநிறுத்தி பணிக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.