8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் பணி பகிஷ்கரிப்பு!

Date:

பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட 8 இடைநிலை சுகாதார தொழிசங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமது பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடத் தயார் என இடைக்கால மருத்துவ சேவைகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வேலை நிறுத்தம் காரணமாக பல மருத்துவமனைகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அனைத்து தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களையும் வாரத்தில் 03 நாட்கள் மாத்திரம் இயக்கும் தீர்மானத்திற்கு எதிராக தபால் ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ஊழியர்களையும் தொழில் நடவடிக்கையை இடைநிறுத்தி பணிக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...