‘அனுபவம் வாய்ந்த, வேலை செய்யத் தெரிந்த ஒருவரை நியமிக்கவும்’:லிட்ரோ நிறுவனம்

Date:

லிட்ரோ நிறுவனத்தின் தற்போதைய வீழ்ச்சிக்கு இந்த ஆண்டு வெளியேறிய மூன்று தலைவர்களுமே பொறுப்பு என லிட்ரோ நிறுவனத்தின் நிகழ்ச்சி மற்றும் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே தெரிவித்தார்.

அதேநேரம், புதிய தலைவராக எரிவாயு வர்த்தகம் தொடர்பான அறிவுள்ள ஒருவரை நியமிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வருட ஆரம்பத்தில் பதவி விலகிய அனில் கொஸ்வத்த, தாம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், எரிவாயு கப்பலுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திஷார ஜயசிங்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரின் குறுகிய கால ஆட்சியே தற்போதைய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

அதிகாரிகள் இப்போது இடமாற்றத் தலைவர்களை நியமிப்பதை நிறுத்திவிட்டு, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்கக்கூடிய பாரிய அனுபவம் வாய்ந்த தலைவரை நியமிக்க வேண்டும் என்று கூறிய கொலம்பெட்டிகே, இலாபம் ஈட்டும் நிறுவனமாக இருந்த லிட்ரோ தற்போது ரூ.10 மில்லியன் கடன் வழங்கும் நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது என்றார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...