அனுராதபுரத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் விபத்தில் உயிரிழப்பு!

Date:

இன்று காலை எரிபொருளைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம், பண்டுலகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த நபர் பல நாட்களாக எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று எரிபொருளைப் பெற்றுக் கொண்டதாகவும், அண்மைய வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் மோதி இன்று காலை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சுகாதார பிரிவினருக்கும் ஏனைய வாகனங்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இன்று காலை களுபோவில வைத்தியசாலைக்கு முன்பாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அதன்படி கொஹுவல சந்தியில் இருந்து களுபோவில சந்தி வரையிலான ஒரு பாதை மூடப்பட்டது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...