அனைத்து அரிசி வகைகளும் அரச அங்கீகாரம் பெற்ற கட்டுப்பாட்டு விலைக்கு இன்று இரவு முதல் விற்பனை செய்யப்பட வேண்டுமென அரிசி ஆலைகள் சங்கத்தின் தலைவர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அனைத்து அரிசி ஆலைகளும் தங்களது இருப்புகளை கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
அதேநேரம் அரிசி சில்லறை விற்பனையாளர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்டுப்பாட்டு விலைக்குக் குறைவான கையிருப்பை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் இன்று முதல் அரிசியின் சந்தை விலையை பேணுவதற்கு மக்களே முழுப்பொறுப்பேற்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கட்டுப்படுத்தப்பட்ட விலையின் கீழ் அரிசியைக் கோருவதற்கு மக்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும், அவ்வாறு வழங்கப்படாவிடின் கிராமசேவக அல்லது பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 2, 2022 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை பின்வருமாறு விதித்துள்ளது.
வெள்ளை/ மற்றும் சிவப்பு நாடு – வேகவைத்த, உள்ளூர் அரிசி ரூ. ஒரு கிலோ 220. வெள்ளை/ சிவப்பு சம்பா – வேகவைத்த – உள்ளூர் அரிசி ஒரு கிலோவுக்கு ரூ. 230. (கீரி சம்பாவைத் தவிர)
கீரி சம்பா (உள்ளூர்) ஒரு கிலோ ரூ. 260 ஆகும்.