எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது: லிட்ரோ!

Date:

நாட்டில் இன்று முதல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று 16,000 சிலிண்டர்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே எரிவாயு கொள்கலன் விநியோகம் இடம்பெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாட்டை வந்தடைந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்றுடன் முடிவடைவதாக லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் 2500 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்கலன் கொண்ட கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் லாஃப் நிறுவனத்திற்கு சொந்தமான எரிவாயு கையிருப்புடன் கூடிய கப்பல் ஒன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...