எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ்கள் சேவைகள் பாதிப்பு: எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

Date:

ஆம்புலன்ஸ், மருந்துகளை ஏற்றிச்செல்லும் வாகனம், ஜெனரேட்டர் போன்றவற்றுக்கு தேவையான எரிபொருளை பல மருத்துவமனைகளில் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸுகளுக்கு எரிபொருள் நிரப்பாவிட்டால், ஆபத்தான நோயாளிகளை மருத்துவமனைகளில் இருந்து வசதிகளுக்கு கொண்டு செல்ல முடியாது என்றும், அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் இல்லாமல் இருந்தால், எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நாட்டில் மருந்துகள் அல்லது மருத்துவமனைகள் விநியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர், 15 நோயாளர் காவு வண்டிகளில் போதியளவு எரிபொருள்  இல்லை என தெரிவித்தார்.

இரண்டு மருந்து ஏற்றுச்செல்லும் லொறிகள், நான்கு கெப் வண்டிகள் மற்றும் ஒரு வேன் எரிபொருளின்றி நிறுத்தப்பட்டிருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளிலும் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் பிரச்சினை மற்றும் பணியாளர்கள் பணிக்கு வர முடியாத நிலை காரணமாக தனியார் அம்புலன்ஸ் சேவைகளும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

ஐரோப்பிய வாகன இறக்குமதிக்கு 25% வரி; டிரம்ப் அறிவிப்பு

வர்த்தக ஒப்பந்தங்களில் முழுமையான உடன்பாடு எட்டப்படாததால், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும்...

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு முதலாவது குழு சவூதி பயணம்!

2026 ஆம் ஆண்டிற்கான ஹஜ் யாத்திரையை முன்னிட்டு, 325 யாத்திரிகர்களைக் கொண்ட...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை, காலி...

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...