கபிலித்தை பகுதியின் காணிகளை அபகரிப்பு செய்பவர்களை கைது செய்யுமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை!

Date:

கபிலித்த வனப்பகுதியில் பலவந்தமாக காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (1) மொனராகலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ,

கபிலித்த வனப்பகுதிக்கு சொந்தமான காணிகளை பயிர்ச்செய்கைக்காக சில குழுக்கள் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க முயற்சிப்பதாக வன பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கினார்.

​​கபிலித்த வனப்பகுதிக்கு வெளியில் 25,000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்டுள்ள போதிலும், சிலர் பயிர் செய்யாமல் ஒதுக்கப்பட்ட காணிகளை கையகப்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...