சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் வீடியோக்கள்: 3 எரிபொருள் தாங்கிகள் உரிமம் ரத்து!

Date:

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை விசாரணைகளை நடத்தி வருகின்றன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகளில் எரிபொருள் போக்குவரத்து லொறிகள் சட்டவிரோதமாக எரிபொருளை இறக்குவதைக் காட்டியது.

இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கவனத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...