சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் வீடியோக்கள்: 3 எரிபொருள் தாங்கிகள் உரிமம் ரத்து!

Date:

சமூக ஊடகங்களில் சட்டவிரோதமாக எரிபொருளை விநியோகிக்கும் காணொளி காட்சிகள் பரப்பப்பட்டதையடுத்து, மூன்று எரிபொருள் பாரவூர்திகளின் உரிமம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த சம்பவங்கள் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஐஓசி ஆகியவை விசாரணைகளை நடத்தி வருகின்றன எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட காட்சிகளில் எரிபொருள் போக்குவரத்து லொறிகள் சட்டவிரோதமாக எரிபொருளை இறக்குவதைக் காட்டியது.

இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கவனத்திற்கு கொண்டு வந்த அனைவருக்கும் அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...