‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’: ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம்!

Date:

‘ஜனநாயகத்தில் தலையிடக் கூடாது’ என வலியுறுத்தி கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத கைதுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டல்களை உடனடியாக நிறுத்துங்கள், பேச்சு மற்றும் கருத்து உரிமைகளைப் பாதுகாக்கவும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த மௌனப் போராட்டம் இடம்பெற்றது.

இந்த போராட்டத்தின் போது, மனித உரிமைகளை எதிர்ப்பது ஜனநாயகத்தில் தலையிடாது, பல நாட்களாக வரிசையில் நிற்கும் மக்கள் மீதான பொலிஸாரின் அடக்குமுறையை நிறுத்துங்கள், அமைதியாக போராடுபவர்களை தொடாதீர்கள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் உன பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்தனர்.

இதேவேளை, இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கையளித்தனர்.

இதன்போது, கடிதத்தைப் பெற்றுக் கொண்ட கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவர் செர்ஜி சிப்லோவ், இது குறித்து ஐ.நா தலைமையகத்திற்கு விளக்கமளிப்பதாக உறுதியளித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...