வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குப் பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு இன்று காலை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
‘தம்மிக வீட்டுக்குச் செல்லுங்கள்’ என கோஷங்களை எழுப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது சூதாட்ட வணிகங்கள் குறித்து பொறுப்புக் கூறுமாறு கேட்டுக்கொண்டதுடன், அவர்களது கேள்விகளுக்கு பதிலளிக்க வெளியில் வருமாறும் அவரை அழைத்தனர்.
இதேவேளை போராட்டம் நடந்துகொண்டிருந்ததால் தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு வெளியே கலகத் தடுப்புப் பொலிஸாரும் இராணுவமும் நிறுத்தப்பட்டிருந்தனர்.