துறைமுகத்தில் 800 கொள்கலன்களில் பல்வேறு பொருட்கள் தேங்கியுள்ளன!

Date:

பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் சுங்கப் பரிசோதனைகள் நிறைவடையாத காரணத்தினால் ஏறத்தாழ 800 கொள்கலன்களில் பல்வேறு பொருட்கள் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துறைமுகத்தின் பெரும்பகுதியை உற்பத்தித் தேவைகளுக்காக பயன்படுத்த முடியாத நிலையில், கொள்கலன்களை விரைவில் அகற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு நேற்று (31) பணிப்புரை விடுத்துள்ளார்.

துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கை கடற்படை முகவர்கள் குழுவினர் நேற்று (31) அமைச்சில் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக பிரதிநிதிகள் அமைச்சரிடம் விரிவாக விளக்கினர்.
அடைபட்டுள்ள இந்த கொள்கலன்களை அகற்றுவதன் மூலம் கொள்கலன் கொள்ளளவை அதிகரிப்பதுடன் பெருமளவிலான அந்நிய செலாவணியை ஈட்டும் வகையில் துறைமுகத்தின் கொள்ளளவும் அதிகரிக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

துறைமுகங்கள் மற்றும் உள்நாட்டு துறைமுக சுங்கம் ஆகியவற்றில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்க சர்வதேச தரத்திலான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் பிரதிநிதிகளுக்கு உறுதியளித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் இலங்கைக்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்ட போதிலும், அதிகளவான கப்பல்கள் வருவதால் பரிமாற்றத்திற்காக வரும் கொள்கலன்களின் எண்ணிக்கை நான்கரை வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கொள்கலன் கையாளுதலின் வினைத்திறனை அதிகரிக்க முனையங்களுக்கிடையில் கொள்கலன்களை கொண்டு செல்லும் பிரைம் மூவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு கடற்படை முகவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய துறையாக இருப்பதால், அந்நிய செலாவணி மற்றும் வருமானத்தை ஈட்டும் கப்பல் துறையில் ஈடுபடுபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது துறைமுகங்கள் மற்றும் சுங்கத்துறையின் தேசிய கடமையாகும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...