நாட்டின் சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது:மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Date:

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடு முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் நிரப்பும் முறையான அமைப்பு இந்த வாரத்தில் கூட ஏற்படுத்தப்படாவிட்டால் சுகாதாரம் மேசமாகும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

ஊழியர்களுக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் சத்திரசிகிச்சை மற்றும் வைத்தியசாலை கிளினிக்குகளை நடத்த முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

அப்படியானால் மருத்துவமனைகளில் வேலைநிறுத்தம் செய்யும் சூழல் ஏற்படும் என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் மருந்துப் பற்றாக்குறை காரணமாக சுகாதார சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் பிரதிநிதிகள் மற்றும் மருத்துவ சங்கத்தின் 31 கிளைகளின் பிரதிநிதிகள் நேற்று (26) பிரச்சினைக்குரிய நிலைமை தொடர்பில் சந்தித்துள்ளனர்.

சுகாதார சேவைக்கு முன்னுரிமை அளித்து எரிபொருள் விநியோக முறையை நடைமுறைப்படுத்தாவிட்டால் கடமைகளை உரிய முறையில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்த நிலையில் நாளை (28) சுகாதார அமைச்சரை சந்திக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...