நாளை முதல் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்:கெமுனு விஜேரத்ன

Date:

தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் நெருக்கடி காரணமாக இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 20,000 இலிருந்து 3000 ஆகக் குறைந்துள்ளதுடன், இலங்கைப் போக்குவரத்துச் சபையிடமிருந்து தனியார் பேருந்துகள் டீசலைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் பேருந்துகள் வழமையாக இயங்காது எனவும் கெமுனு உறுதியாகக் கூறினார்.

தனியார் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை பஸ் டிப்போக்களில் தாங்கிகளை நிரப்ப முடியும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்ததை அடுத்து பஸ்கள் வழமையாக இயங்கும் என கெமுனு உறுதியளித்துள்ளார்.

மேலும், தனியார் பேருந்துகளுக்கு மட்டும் 24 மணி நேர எரிபொருள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்துகளின் சேவைகள் நாளை வழமைக்கு திரும்பினாலும், மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...