புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரை தனியார் பஸ் சேவை மட்டுப்படுத்தப்படும்!

Date:

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்படாமையால் இன்று தனியார் பஸ் சேவைகள் 90 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும் வரையில் தனியார் பஸ் சேவைகள் குறைந்தபட்சமாகவே இடம்பெறும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகளும் சுமார் 75 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார கருத்து வெளியிட்டார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக கொள்கலன் வாகன கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஒன்றிணைந்த கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தத்தை அமுல்படுத்துமாறு போராட்டம்!

2027ஆம் ஆண்டு வரை இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்ததை உடனடியாக...

கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா சென்ற கனடா பிரதமர்!

சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்கை கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று...

ஜனாதிபதி தலைமையில் வடமாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட தேசிய வீட்டு வசதி திட்டம்

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ்,...

இலங்கையில் 13% கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நீரிழிவு!

கர்ப்பகாலத்தில் 13 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) ஏற்பட்டுள்ளதாக...